Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல்லிக்கட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் துளசிராமன் தகவல்

பிப்ரவரி 17, 2023 02:17

எருமப்பட்டி :- எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு விழா நடத்த பூமி பூஜை செய்யப்பட்டது. பின்பு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் 18 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வந்துள்ளன. ஆனால் முழுமையான பணிகள் நடைபெறாத நிலையில், இந்த செய்தியை நம்பி மாடுபிடி வீரர்களும், மாட்டு உரிமையாளர்களும் மாடுகளை ஓட்டி வர வேண்டாம் என பொட்டியிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து வேலைகளும் முடிவுற்றவுடன் அனைத்து அதிகாரி ஒப்புதல் உடன் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்